3 பிஎச்கே டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன்: சரத் குமார்

3 பிஎச்கே படம் குறித்து சரத் குமார் பேசியுள்ளார்...
நடிகர் சரத் குமார்
நடிகர் சரத் குமார்
Published on
Updated on
1 min read

3 பிஎச்கே திரைப்படத்திற்கான டப்பிங்கின்போதே அழுதுவிட்டதாக நடிகர் சரத் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் நாயகனாக நடிக்க சரத் குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்த 3 பிஎச்கே திரைப்படம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய இப்படம் நடுத்தர வர்க்கக் குடும்பம் சொந்த வீடு கட்ட எவ்வளவும் சிரமங்களையும் அவமதிப்பையும் சந்திக்கின்றனர் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

சில நாள்களுக்கு முன் வெளியான டிரைலரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் சரத் குமார், “தமிழ், தெலுங்கு மொழிகளில் 3 பிஎச்கே படத்திற்கான டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன். படம் அந்த எமோஷன்களை நன்றாகக் கடத்துகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor sarathkumar about 3 bhk movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com