அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘அனோரா’ திரைப்படம்

அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

News image

ஆஸ்கர் விருதுடன் ஷான் பேகர்.

Updated On :3 மார்ச் 2025, 10:35 am IST

அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்துள்ளது.

இப்படத்திற்காக இயக்குநர் ஷான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் என ஷான் பேகர் 4 விருதுகளை வென்றார்.

4 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்த ஷான் பேகர் 4 விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்.

இதன்மூலம் ஒரே படத்திற்காக 4 விருதுகளை வென்ற முதல் நபர் என்ற சாதனையை ஷான் பேகர் பெற்றுள்ளார்.

மேலும அனோரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசனும், 'தி ஃப்ரூடலிஸ்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் ப்ரோடியுன் வென்றனர்.

அதேசமயம் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட அனுஜா குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை. இந்தப் பிரிவில் I'M Not A Robot(ஐம் நாட் எ ரோபட்) என்ற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.