சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மீண்டும் மறுவெளியீடாகும் இன்டர்ஸ்டெல்லர்!

இன்டர்ஸ்டெல்லர் மறுவெளியீடாகிறது...

News image
Updated On :11 மார்ச் 2025, 3:06 pm IST

இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் மீண்டும் மறுவெளியீடாகிறது.

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்டர்ஸ்டெல்லர். ஆய்விற்காக விண்வெளி செல்லும் நாயகன் மீண்டும் பூமிக்குத் திரும்பும் கதையை உணர்வுப்பூர்வமாகப் பேசிய திரைப்படமாக உருவாகியிருந்தது.

இப்படம் வெளியானதிலிருந்து இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் வரை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துக்கொண்டே இருக்கிறது. படத்தின் கதையை நோலன் சிந்தித்த விதமும், அதை திரைப்படமாக உருவாக்கிய விதமும் அபாரமானது என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த பிப். 7 - பிப். 14 வரை இப்படம் இந்திய ஐமேக்ஸ் திரைகளுக்காக மறுவெளியீடு செய்யப்பட்டது. இதில், பிவிஆர் மற்றும் கோவை பிராட்வே சினிமாஸில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் பல ஆயிரம் ரசிகர்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படத்தைக் கண்டுகளித்தனர்.

Story image

இதனால், ஆச்சரியப்படும் அளவிற்கு இந்திய மறுவெளியீட்டிலும் இன்டர்ஸ்டெல்லர் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்தது.

இந்த நிலையில், வருகிற மார்ச் 14 - மார்ச் 21 வரை மீண்டும் 7 நாள்களுக்கு இந்திய ஐமேக்ஸ் திரைகளில் இப்படம் மறுவெளியீடாகும் என அறிவித்துள்ளனர்.

கடந்தமுறை பார்ப்பதற்கான வாய்ப்பும் டிக்கெட்டும் கிடைக்காத ரசிகர்கள் இந்த முறை தவறவிடக்கூடாது என உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்துடன் டியூன் (dune) படமும் அதேநாளில் மறுவெளியீடாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.