மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

தமன் இசையில் ‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல்..!

அதர்வா நடித்துள்ள இதயம் முரளி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

News image

இதயம் முரளி போஸ்டர்.

Updated On :21 மார்ச் 2025, 6:51 pm IST

அதர்வா நடித்துள்ள இதயம் முரளி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் கவனம் பெற்ற ஒருவராக நடிகர் அதர்வா முரளி இருந்து வருகிறார். தனது தந்தையின் பட்டப் பெயரான ‘இதயம் முரளி’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் கயாது லோஹர், பிரீத்தி முகுந்தன், ஏஞ்சலின், பிரக்யா நக்ரா என பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாடலை இன்று(மர்ச் 21) மாலை 6 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று கால தாமதமாக மாலை 6.30 மணியளவில் பாடல் வெளியாகியுள்ளது.

பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா 'பட்டத்து அரசன்' திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதுமுக இயக்குநருடன் இணைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

தணல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர்  தயாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.