கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பிரபல நடிகரைக் காதலிக்கும் ரிது வர்மா?

காதலில் ரிது வர்மா...

ரிது வர்மா

Published On :

நடிகை ரிது வர்மா பிரபல நடிகரைக் காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரிது வர்மா. தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

இவர் நடிகர் விக்ரமுடன் நடித்த துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ரிது வர்மா தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜை காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான வைஷ்ணவ் தேஜ் உப்பென்னா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தற்போது, தொடர்ந்து நடித்து வருகிறார்.

ரிது வர்மா - வைஷ்ணவ் தேஜ்

ரிது வர்மா - வைஷ்ணவ் தேஜ்

இவரும் ரிது வர்மாவும் இணைந்து எந்தப் படத்திலும் நடித்ததில்லை. ஆனால், நண்பர்களின் விருந்துகளில் சந்தித்து நண்பர்களானதாகவும் பின் சில மாதங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இருவரும் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்திலும் இருக்கிறார்களாம்.

நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜை விட ரிது வர்மா 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.