பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அதிகபட்ச முதல்நாள் வசூல்..! ஹிட் 3 படத்தினால் நானி சாதனை!

நடிகர் நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 படத்தின் முதல்நாள் வசூல் விவரம்...

News image

நானியின் ஹிட் 3 போஸ்டர்.

Updated On :2 மே 2025, 11:41 am IST

நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 படத்தின் முதல்நாள் வசூலின் மூலமாக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப் படமானது.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் நேற்று (மே.1) திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஹிட் படத்தின் முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்றன.

ஹிட் 3 படத்துக்கு ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் வன்முறை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.

இந்நிலையில், முதல்நாளில் ஹிட் 3 படம் ரூ. 43 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுதான் நானி படங்களில் அதிகபட்ச முதல்நாள் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.