இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் அடுத்தப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜிடம், ‘உங்களின் அடுத்தப்படம் என்ன? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்குப் பின்பே சுயாதீன திரைப்படம் ஒன்றை குறைந்த பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை வைத்து இயக்கும் திட்டத்தில் இருந்தேன். ஆனால், ரெட்ரோ படத்தால் அம்முயற்சி தள்ளிப்போனது.
அப்படத்தை எடுத்து திரைவிழாக்களுக்கு அனுப்பி பின் திரையரங்குகளில் வெளியிடலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். கதை தயாராகவே இருக்கிறது. ஒருவேளை என் அடுத்தப்படம் இதுவாகவும் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

ஈழத்தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்யுங்கள்... உருக்கமான பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

படப்பிடிப்பை முடித்த கார்த்திக் சுப்புராஜ்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

