மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

விடாமுயற்சி, வீர தீர சூரன் வெற்றிப்படங்கள் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்

இந்தாண்டு வெளியான படங்களின் வெற்றி குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கருத்து...

News image
Updated On :14 மே 2025, 3:54 pm IST

இந்தாண்டு வெளியான திரைப்படங்களின் வெற்றி, தோல்வி குறித்து பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இந்தாண்டு இதுவரை வெளியான திரைப்படங்களில் ஒரு சில படங்களே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, சிறிய பட்ஜெட்களில் உருவான குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இதுகுறித்து, நேர்காணலில் பேசிய திரைப்பட விநியோகிஸ்தர், திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம், “சின்ன படங்களாக இருந்தாலும் கதையம்சமுள்ள படங்களே வெற்றிகளைப் பெறும். இன்றைய ரசிகர்களை புரமோஷன் மூலம் ஏமாற்ற முடியாது. விடாமுயற்சி, வீர தீர சூரன் ஆகிய படங்கள் வெற்றிப்படங்கள் இல்லை. விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தைக் கொடுத்த படங்கள். பெரிதாக வசூலையும் செய்யவில்லை.

வீர தீர சூரன் வெற்றி என விக்ரமுக்கு பெரிய மாலையாகப் போட்டார்கள். உண்மையில், அப்படம் வெற்றிப்படமே இல்லை. இது தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருப்பவர்களே நன்றாகத் தெரியும். ஆனாலும் அதன் வெற்றியைக் கொண்டாடினர்.

முக்கியமாக, படத்தின் தமிழ்நாடு விநியோகிஸ்தர் பெரிய நஷ்டத்தையே சந்தித்தார். இல்லையென்று சொல்வாரா? ஏன் பொய்யாக ஒரு படத்தைக் கொண்டாட வேண்டும்? ஒரு படம் வெற்றியா இல்லையா என்பதை படத்தின் நாயகரிடம் சொல்ல வேண்டும். பெருமைக்காக போலித்தனமாக வெற்றி விழாக்கள் நடத்தக்கூடாது.

வாழை, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களே சிறப்பாக வசூலித்திருக்கின்றன. அப்படங்களுக்கு வெற்றிவிழா நடத்துங்கள் அதுதான் சரியானது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.