மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வெளியீட்டுக்குத் தயாரான அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர்!

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

News image

நடிகர் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:11 am IST

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் நடிகர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இப்படத்தில், நடிகை அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

நவீன கால இளைஞர் ஒருவரின் காதலைப் பேசும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மலையாள திரையுலகில் வெளியான “ஹிருதயம்” படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் நீண்ட காலமாக வெளியீட்டைச் சந்திக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

An announcement has been made regarding the release of the film Once More, starring Arjun Das and Aditi Shankar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.