தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தமிழக முதல்வர் விஜய் நாயகனாக நடித்துள்ள “ஜன நாயகன்” படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 6:38 pm IST

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் நாயகனாக நடித்து வெளியான “ஜன நாயகன்” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நாயகனாக நடித்து உருவான அவரது கடைசி படம் “ஜன நாயகன்”. இப்படம், கடந்த ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான ஜனநாயகன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இப்படத்தின் வெளியீட்டை மாநிலம் முழுவதும் முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடினர்.

அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில் நடிகர்கள் பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் “ஜனநாயகன்” படம் வரும் ஆக. 21 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என இன்று (ஆக. 19) அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the film Jananayagan, starring TN CM Joseph Vijay in the lead role, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.