தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கவினின் புதிய படத்தில் இணைந்த சாண்டி!

நடிகர் கவினின் 9 ஆவது திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளது குறித்து...

News image

கவினின் புதிய படத்தில் சாண்டி மாஸ்டர்...

Updated On :17 ஜனவரி 2026, 1:41 pm IST

நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் 9 ஆவது திரைப்படத்தில் நடன இயக்குநர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் 9 ஆவது திரைப்படம் உருவாகி வருகின்றது. இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையில் உருவாகும் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கின்றார்.

இந்த நிலையில், இந்தப் புதிய திரைப்படத்தில் நடிகரும் நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக, படக்குழுவினர் இன்று (ஜன. 17) சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, பிக்பாஸ் 3 ஆவது சீசனில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட நடிகர் கவின் மற்றும் நடன இயக்குநர் சாண்டியின் கூட்டணி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “லோகா” திரைப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

choreographer Sandy will be playing a key role in actor Kavin's 9th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.