பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

தனுஷின் 55 ஆவது திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இணைந்துள்ளது குறித்து...

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - சாய் அபயங்கர் - நடிகர் தனுஷ் - எக்ஸ்/Wunderbar films

Published On :

நடிகர் தனுஷின் 55 ஆவது திரைப்படத்தில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்தப் புதிய படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த நிலையில், இந்தப் புதிய திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாக, தயாரிப்பு நிறுவனம் இன்று (ஜன. 29) அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஏற்கெனவே, நடிகர் சூர்யாவின் “கருப்பு”, நடிகர் கார்த்தியின் “மார்ஷல்” மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ கூட்டணியின் புதிய படம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

composer Sai Abhyankar has joined actor Dhanush's 55th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.