இசையமைப்பாளர் இளையராஜா அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அன்னக்கிளி மூலம் அறிமுகமானவர் பல நூற்றுக்கணக்கான இயக்குநர்களுடன் பணியாற்றிவிட்டார். 1540 படங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் என இசையுலகில் மாபெரும் கலைஞர் என்ற புகழுடனே நீடிக்கிறார்.
இடையே, வாலியண்ட் என்கிற சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது, இரண்டாவது சிம்பொனி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இருந்தும், பல ரசிகர்களுக்கு இன்றைய இளம் இயக்குநர்கள் ஏன் இளையராஜாவைப் பயன்படுத்துவதில்லை? அவர் இசையமைத்தால் இன்னும் சிறப்பான பாடல்கள் கிடைக்குமென ஆதங்கமும் இருந்தது.
தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் இளையராஜாவைத் தங்கள் படங்களில் இசையமைக்க வைக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.
இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா பல நல்ல பாடல்களைக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பாக்கெட் நாவல் படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தன் 10-வது படத்திலும், மாரி செல்வராஜ் மஞ்சணத்தி என்கிற படத்திலும் இளையராஜாவுடன் இணைந்துள்ளனர். இந்த மூன்று படங்களும் வெவ்வேறு கதையமைப்பு மற்றும் பாணியில் உருவாகவுள்ளது கவனிக்க வேண்டியது.
தன் 83-வது வயதிலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும் இளையராஜா, அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடன் இணைவது ரசிகர்களிடம் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Music composer Ilaiyaraaja is set to compose music for films by leading directors, one after another.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?
கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

50 ஆண்டுகளை நிறைவு செய்த இளையராஜா!
விடியோக்கள்

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி




