கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் மது சி. நாராயணன் தன் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
திரை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் இயக்குநர் மது சி. நாராயணன் இயக்கத்தில் உருவாகி இந்தியளவில் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் கும்பளங்கி நைட்ஸ்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள சுற்றுலா கிராமமான கும்பளங்கி என்கிற பகுதியை மையமாக வைத்து அங்கு காதல், குடும்ப உறவுகளின் உன்னதமான பக்கங்களை வெளிக்கொண்டு வந்த படமாக உருவான இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் பலராலும் பாராட்டப்பட்டது. நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், சௌபின் சாகிர், ஷேன் நிகம், அன்னா பென் என பலருக்கும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான படமாகவே அமைந்தது.
இப்படம் வெளியாகி 7 ஆண்டுகளாகியும் மது அடுத்த படத்தை இயக்காமல் இருந்தார். இடையே, நடிகர் நஸ்லனை வைத்து புதிய படத்தை இயக்குவார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், மது சி. நாராயணன் இயக்கத்தில் நஸ்லன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Madhu C. Narayanan, the director of the film Kumbalangi Nights, is set to direct his next film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










