இயக்குநர் ராஜமௌலியின் வாரணாசி படத்தின் கதைக் களம் குறித்து எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர்கள் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடிக்கும் வாரணாசி திரைப்படம் உருவாகி வருகிறது.
ஆஸ்கர் விருதாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, எழுத்தாளரும் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
ரூ. 1,400 கோடி செலவில் உருவாகி வரும் இந்தப் படம், 2027 ஏப்ரல் 7 ஆம் தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு கலந்துரையாடலின்போது, படத்தின் கதைக் களம் குறித்து விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து வாரணாசி கதை உருவாக்கப்பட்டிருப்பதாக விஜயேந்திர பிரசாத் கூறினார்.
படத்தின் முன்னோட்ட விடியோவிலேயே ராமர், ஹனுமன், கும்பகர்ணன் ஆகிய பாத்திரங்கள் காட்டப்பட்டிருக்கும்.

வாரணாசி படத்தில் ராமர் - கும்பகர்ணன் காட்சி - யூடியூப்
Summary
Varanasi update: Writer Vijayendra Prasad hints at War between Rama and Kumbhakarna
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







