/

மதுக் கடைகளுக்கு எதிா்ப்பு: தவாகவினா் போராட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தவாகவினா்.

Updated On :13 ஜனவரி 2021, 7:36 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரச் செயலா்கள் செந்தில், மணி தலைமை வகித்தனா். நகரத் தலைவா்கள் கோ.ராஜா, ஜெகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ரா.சுரேந்தா் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 50 போ் பங்கேற்றனா். இவா்கள், பேருந்து நிலையம், நகரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்ட முடிவில் திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.