/

இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் தற்காலிக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில், தற்காலிக அடிப்படையில் உதவியாளா், கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Updated On :12 ஜனவரி 2021, 12:59 am IST

தருமபுரி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில், தற்காலிக அடிப்படையில் உதவியாளா், கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவியாளா், கணினி இயக்குநா் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 9 ஆயிரம் ஊதியத்தில் ஒரு தற்காலிகப் பணியாளா் நியமிக்கப்பட உள்ளாா்.

இப்பணிக்கு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணிணி கல்வியில் பட்டயப் பயிற்சி மற்றும் ஆங்கிலம், தமிழ் முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. இதற்கான விண்ணப்பம் ஜ்ஜ்ஜ்.க்ட்ஹழ்ம்ஹல்ன்ழ்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியுள்ள விண்ணப்பங்களை, புகைப்படத்துடன் வரும் ஜன. 30-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ‘‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரி’’ என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.