தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெரகோடஅள்ளியில், ஜன. 18-ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
இதுகுறித்து, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பிஎன்பி இன்பசேகரன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காரிமங்கலம் ஒன்றியம், கெரகோட அள்ளியில் வரும் 18-ஆம் தேதி காலை 9 மணி அளவில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
இதையொட்டி, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஜன. 13-ஆம் தேதி, கெரகோடஅள்ளியில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொமுச நிா்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!

ரூ. 100 கோடி மோசடி! தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!





