கவலை இல்லை
சில அரசியல் கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள கடையடைப்பு, உண்ணாவிரதம், மனித சங்கிலி என்று தாங்களே ஒரு தேதியை நிர்ணயித்து பொதுமக்களின் இயல்பு வாழ்வை நிலைகுலைய வைக்கிறார்கள். இதனால் தனி மனிதர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது. தினசரி வருவாயை நம்பியிருக்கும் மக்களின் குடும்பங்களைப் பற்றி அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே கவலை இல்லை. இதனால் முதியோர், நோயாளிகள், குழந்தைகள் என அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக் கூடாது.
ந.சந்திரமெளலி, ஊத்துக்குளி.