அறிவியலின் துணையால் இயற்கை விளைவிக்கும் பேரழிவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளோம். அதே சமயத்தில், அச்சத்தாலும், அறியாமையாலும், வழிதவறி நம்மை நாம் காத்துக் கொள்ள வழியின்றியிருக்கிறோம். இயற்கையை பெருமளவு அறிவியலால் வென்றுவிட்டோம்; ஆனால் மனித இயற்கையை, அதன் சில அடிப்படைக் குறைகளை, ஆசைகளையும், அச்சங்களையும் இன்னும் வெல்லவில்லை. இதனால் வழிபாடு தவறு என்பது அர்த்தமில்லை. விபத்து நேர்ந்ததற்கு வழிபாட்டுணர்வு காரணமல்ல. அதைச் செய்வதற்கு சரியான வழிமுறைகளை வகுத்துச் செயல்படாததுதான் காரணம்.