இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணப்புழக்கம் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளிடம் சுங்கவரி வசூலிக்கும் போது சில்லறைக்கு பதிலாக ரூ.5 மதிப்புடை கூப்பன்கள் மீதி சில்லறையாக வழங்கப்படுகிறது. அந்த கூப்பன்களில் நான்கு வழிச்சாலை வரைபடமும் பார்கோடும் இந்திய ரூபாயில் உள்ளது போல வரிசை எண்னும், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை(என்எச்ஏஐ) என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இக்கூப்பன் செல்லுபடியாகும் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே போல் குறைந்த அளவு மதிப்பு கொண்ட ரூ, 10, ரூ, 20, ரூ, 50 மதிப்பில் கூப்பன்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் அவைகள் சுங்கவரி கட்டணத்திற்கு மீதி சில்லறை பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவலை சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கூறினார்.