மூணாறுக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த ஸ்பைஸ் கார்டன் எனுமிடத்தில் ருத்ராக்ஷ மரங்களைப் பார்வையிட்டோம். எங்களுடன் கைடாக வந்த இளைஞர் பிஎஸ்ஸி பாட்டனி படித்தவராம். அவர் அந்த கார்டனில் இருந்த அத்தனை விதமான மரம், செடி கொடி வகைகளைப் பற்றியும் அதனதன் அறிவியல் பெயர்களுடன் தெளிவாக விளக்கினார். ருத்ராக்ஷத்தின் பலவிதமான வடிவங்களை அங்கே அவர்களது விற்பனை அங்காடியில் மாதிரிக்கு வைத்திருந்தார்கள். ருத்ராக்ஷத்தில் 1 முதல் 21 முகங்கள் வரை உண்டு என்று அப்போது தெரிந்தது.
ருத்ராக்ஷம் எப்படி தயாராகிறது என்றால்?
இந்த ருத்ராக்ஷ மரங்களில் விளையும் காய்கள் முற்றியதும் அவற்றைப் பறித்துக் கீறினால் உள்ளே விதைகள் கிடைக்கும். இந்த விதைகளை அவற்றில் இருக்கும் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1 முக ருத்ராக்ஷம் முதல் 21 முக ருத்ராக்ஷங்கள் வரை வகை பிரிக்கிறார்கள். இவற்றில் சில வகையான ருத்ராக்ஷ விதைகள் அடிக்கடி விளையக் கூடியவையாகவும், சிலவகை ருத்ராக்ஷங்கள் அபூர்வமாக விளையக்கூடியவையாகவும் இருக்கின்றன. ருத்ராக்ஷ காய்களைக் கீறி வெளியில் எடுக்கப்படும் விதைகளை முதலில் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கழுவுகிறார்கள். பின்னர் அவற்றை ஈரம் போக நன்கு துடைத்து உலர்வாக்கி 40 நாட்கள் நல்லெண்ணெயில் ஊற வைக்க வேண்டுமாம்.
ஏனெனில், ருத்ராக்ஷம் மனித உடல் போன்ற நுண் உணர்வுகளைக் கொண்டது என்பதால், அவற்றின் மேல் தோல் மிகவும் சென்ஸிடிவ்வாக இருக்குமாம். அவற்றை நல்லெண்ணெயில் ஊற வைக்காமல் அணியும் போது மிக விரைவில் மேல் தோல் சிதிலமடையக் கூடும். எனவே ருத்ராக்ஷ விதையின் மேல் தோலைக் கடினமாக்கி ருத்ராக்ஷத்தின் பலனை முழுமையாக அடையும் பொருட்டு ருத்ராக்ஷ விதைகள் நல்லெண்ணெயில் ஊற வைத்து எடுக்கப்பட்டு, நன்கு துடைக்கப்பட்டு மாலையாகக் கோர்த்து அணியப்படுகிறது என்பது ஐதீகம்.
ருத்ராக்ஷத்தை மாலையாகக் கோர்க்கும் போது அவற்றை தங்கம், செம்பு அல்லது சிவப்பு நிறப் பருத்தி நூலில் கோர்த்து அணிய வேண்டும்.
போலி ருத்ராக்ஷங்களை எப்படிக் கண்டறிவது?
ருத்ராக்ஷத்தில் தற்போது போலிகள் நிறைய வந்து விட்டன. காரணம் போலிச்சாமியார்களும், போலி பக்தியாளர்களும், தெரு முக்குகள் தோறும் பெருகி விட்ட சிறு, குறுங்கோவில்களும் தான். ருத்ராக்ஷ மரங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் மாத்திரமே ருத்ராக்ஷ மரங்கள் அதிகமுள்ளன. அங்கே விளையும் விதைகளைக் கொண்டு மொத்த தமிழகத்தின் ருத்ராக்ஷத் தேவையைப் பூர்த்தி செய்து விட முடியுமா என்ன? அதனால் இடையிடையே போலி ருத்ராக்ஷங்களும் நிறையவே பெருகி விட்டன. ருத்ராக்ஷங்களின் இயல்பைப் பற்றி அறியாதவர்களுக்கு எது நிஜம்? எது போலி? என்றே உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போலி ருத்ராக்ஷங்கள் தற்போது அதிகளவில் பல்கிப் பெருகி விட்டன. இந்த போலி ருத்ராக்ஷங்களை ‘பத்ராட்சம்’ என்கிறார்கள். இந்த பத்ராட்சங்களில் சாயமேற்றி அவற்றை போலி ருத்ராக்ஷங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.
மாலையில் இருப்பது ருத்ராக்ஷமா? பத்ராட்சமா? எப்படிக் கண்டறிவது?
இப்படியான வழிமுறைகளில் நாம் ஒரிஜினல் ருத்ராக்ஷத்தைக் கண்டறியலாம்.
ருத்ராக்ஷங்களைப் பராமரிப்பது எப்படி?
ருத்ராக்ஷத்தின் மருத்துவ குணங்கள்...
இப்படி ருத்ராக்ஷத்தில் தேடத்தேட ஒளடத குணங்கள் ஏரளமாக இருக்கின்றன என்கிறார்கள்.
பாலூட்டி வளர்த்த கிளியும் பஞ்சவர்ணக்கிளியும்...
குருவாயூர் கோயிலுக்கு கடும் போட்டியாக மாறுகிறதா பத்மநாபசுவாமி திருக்கோயில்?
யார் இந்த கெளஹர் ஜான்? இந்த ஆர்மீனியப் பெண்ணுக்கு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பிப்பது ஏன்?
‘காலா’ வைப் புரிந்து கொள்ள பக்தியில் மூடத்தனம் இல்லாத மனம் வேண்டும்!
ராஜாவை ஏன் எப்போதும் கொண்டாடத் தோன்றுகிறது எனில்... இதற்காகவும் தான்!