Enable Javscript for better performance
Turkey state in the name of tamil king adhiyaman neduman anchi!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    துருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா? புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன?

    By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published On : 17th August 2019 04:58 PM  |   Last Updated : 17th August 2019 06:41 PM  |  அ+அ அ-  |  

    adhiyaman

     

    அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னன் ஒளவையாரோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான். உண்பவரை நெடுங்காலம் வாழ வைக்கக் கூடிய அருநெல்லிக்கனி ஒன்றைக் காட்டில் மிகவும் முயன்று பெற்று அதனைத் தான் உண்ணாமல் ஒளவைக்குக் கொடுத்து உண்ணச் செய்தவன் இவன். பகைவர் எழுவரை ஒரு போரில் வென்று அவர்களுக்குரிய அணிகலன்களையும் அரச உரிமையையும் இம்மன்னன் கவர்ந்து கொண்டான். இவனுடைய திருக்கோவலூர் வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடியுள்ளார். இம்மன்னன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்டான். அதியமான் பகைவரோடு புரிந்த போரில் பகைவர் எறிந்த வேல் அவனுடைய மார்பில் தைக்க அவன் உயிரிழந்தான். ஒளவையார் ஆற்றாமல் வருந்திச் 'சிறியகட் பெறினே' என்று தொடங்கும் இப்பாடலைப் பாடினார்.
     

    ஒளவையாரின் கண்ணீர்...

    அதியமான் அரசவைக்குத் தம் புலமையால் பெருமை சேர்த்தவர் ஒளவையார். உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கும் நெல்லிக்கனியை மலைப் பிளவுகளையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டு வந்து,  அதன் பெருமையைக் கூறாமல் ஒளவை உண்ணுமாறு தந்தவன் அதியமான். ஒளவையார் அதியமானையும் பாடி அவன் மகன் பொகுட்டெழினியின் வீரத்தையும் பாடினார். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றார். இவ்வாறு நட்புக் கொண்டிருந்த நிலையில் அதியன் இறந்துபட்டான். ஒளவையின் கண்ணீர்ப் பெருக்கு வற்றவில்லை. அவன் மார்பில் தைத்த வேல் அந்த அளவோடு நின்றதா! இல்லை,

    அருங்கலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் 
    புரப்போர் புன்கண் பாவை சோர 
    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில் 
    சென்றுவீழ்ந் தன்று...

    - என்று சொல்லி அழுகின்றார் ஒளவையார்.

    அதியமான் கோட்டை...

    இது ஒரு சங்ககால ஊர் ஆகும். அதியமான் கோட்டை சங்ககால மன்னரான அதியமானின் தலைநகராகக் கருதப்படுகின்றது. அதியமானைப் பற்றிச் சங்க இலக்கியத்தில் பல குறிப்புகள் உள்ளன. ஜம்பை என்ற ஊரில் “ஸதியபுதோ” அதியமானைக் குறிப்பிடும் தமிழ் பிராமிக் கல்வெட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரியிலிருந்து 6 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அதியமான் கோட்டை உள்ளது. இதன் பழைய பெயர் தகடூராகும்.

    தொல்லியல் சான்றுகள்...

    இவ்வூரில் இரும்புக்கால, வரலாற்றுத் துவக்கக்கால வாழ்விடம் உள்ளது. இங்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை அகழாய்வு செய்துள்ளது. இந்த அகழாய்வின்போது 5 குழிகள் தோண்டப்பட்டன. இவற்றில் மூன்று பண்பாட்டுக் காலங்களின் சான்றுகள் கிடைத்துள்ளன. முதல் பண்பாட்டுக்காலம் பெருங்கற்காலம் / சங்ககாலத்தைச் சேர்ந்ததாகும். இங்கு கருப்பு-சிவப்பு மற்றும், சிவப்பு நிறப்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இரண்டாம் பண்பாட்டுக் காலத்தில், சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலச் சான்றுகள் கிடைத்துள்ளன. மூன்றாம் பண்பாடு, பொ.ஆ.11-16 (பொது ஆண்டு) ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாகும்.இங்கு சோழர் காலக் கட்டடப் பகுதிகளும் காணப்படுகின்றன. பொ.ஆ 12 ம் நூற்றண்டைச் சேர்ந்த கோட்டையும் இங்கு இருந்துள்ளது. இன்று இந்த இடம் அழிந்து மண் மேடாகக் காட்சி அளிக்கின்றது.

    படைக்கலக் கொட்டில்...
        

    சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் அவர்கள் ஒற்றுமையுடன்  உறவாடிய வாய்ப்பு மிகக் குறைவே. அவர்களுள் நாட்டை  விரிவுபடுத்தும் எண்ணத்தில் போர்க்களம் புகுவதும், போரிட்டு வெற்றியோ தோல்வியோ அடைவதும் வரலாற்று ஏடுகளில்  சொல்லப்பட்டு உள்ளன. போரிட, போர்க்குரிய வாள், வேல், வில், அம்பு முதலிய படைக்கருவிகளைத் தயாராக வைத்திருப்பர். இரும்பு செய் கொல்லர்க்குப் படைக்கருவிகள் செய்து தருவது  அவர்களின் கடமையாக இருந்தது ;
     

    வேல் வடித்துக் கொடுத்தல் 
     கொல்லற்குக் கடனே

    - எனப் புறநானூறு கூறுகிறது. படைக்கருவிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் கட்டடமே ‘படைக்கலக் கொட்டில்’ ஆகும்.

    வள்ளல் அதியமான் சிறந்த போர்த்திறம் மிக்க மன்னன். ஒரு  காலத்தில் அமைதியை நாடிப் புலவர் ஒளவையாரைத் தொண்டைமானிடம்     தூது     விட்டான் ; தொண்டைமான், ஒளவையாரிடம் தன் பெரிய படைக்கலக் கொட்டிலைக் காட்டிச் செருக்குடன் நின்றான். அவனது செருக்கையடக்கும் நோக்கத்தில் ஒளவையார்,

     இங்கே படைக்கருவிகள் மயில் தோகை 
    அணியப்பட்டு மாலை சூட்டப்பட்டுத் திரண்ட காம்பும் 
    அழகுபட அமைத்து நெய் பூசப் பெற்றுக் காவலுடன் 
    உள்ளன ;     ஆனால், அதியமான படைக்கலங்களோ 
    பகைவரைக்குத்தி நுனி முரிந்து செப்பஞ் செய்யக் கொல்லன் 
    உலைக்கூடத்தே கிடக்கின்றன. இதன் வழி அவன் வேல் 
    கூர்மையானது எனக் குறிப்பிடுகிறார். (புறநானூறு : 95)
        

     

    இங்குக் கூறப்பட்ட படைக்கலக் கொட்டிலும், கொல்லன் உலைக் கூடமும் கட்டடக் கலை நோக்கில் சிந்திக்கத்தகும்.

    ஹிட்டிகளும்  அதியமானும் (Hittites and Adiyaman)

    பூர்வீகம் ஆதாரமில்லாத இரண்டு நடுகல்கள் (steles) 1970 களில் அதியமான் பொது நூலகத்தில் இருந்தன, அவை அதியமான் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டன.

    சுண்ணாம்பு நடுகல் துண்டு ஒரு காளை கடவுள் ஒரு காளை மீது நிற்பதைக் காட்டுகிறது. நடுகல் துண்டின் இடது கால் மட்டுமே தப்பிப்பிழைத்தது. தற்போதைய துண்டு சுமார் 1 மீட்டர் உயரம் (டெனான் உட்பட), சுமார் 30 செ.மீ அகலம் மற்றும் 20 செ.மீ தடிமன் கொண்டது. புயல் கடவுளுக்கு அர்ப்பணிப்பு மற்றும் எந்தவொரு சேதத்திற்கும் எதிரான பாதுகாப்பு சாபங்கள் பற்றி துண்டின் பக்கமும் பின்புறமும் 4 வரிகள் ஹைரோகிளிஃபிக் லூவியன் கல்வெட்டைப் பாதுகாத்துள்ளன. அதன் கண்டுபிடிப்பு இடம் பற்றி எந்த தகவலும் இல்லை. பாய்பேபனாராவுடனான மொழியியல் (Boybeypınarı) ஒற்றுமைகள் காரணமாக, கிமு 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது கிமு 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு தேதி பரிந்துரைக்கப்படுகிறது.

    மற்ற நடுகல், சுண்ணாம்புக் கற்களால் ஆனது, உயரம் மற்றும் அகலம் 72 செ.மீ மற்றும் 50 செ.மீ. இது புயல்- கடவுளை ஒரு வழக்கமான போஸில் காட்டி கோடரியுடன் இருக்கிறது. குறுகிய டூனிக், பாயிண்டி காலணிகள் மற்றும் கொம்புகள் கொண்ட பாயிண்டி தொப்பி ஆகியவற்றைக் கொண்டு அவர் பழைய பாணியைக் காண்பிப்பார் மற்றும் 10-ஆம் நூற்றாண்டில் ஒரு தேதி பரிந்துரைக்கப்படுகிறது. துண்டின் வலது பக்கத்தில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட 4-வரி லூவியன் கல்வெட்டு(Luwian inscription) உள்ளது, இது புயல்-கடவுளுக்கு அர்ப்பணிப்பு மற்றும் எழுத்தாளரின் கையொப்பம்.

    கிமு 1600 இல் வட-மத்திய அனடோலியாவில், தற்போதைய துருக்கியில்  ஹிட்டிக்களை மையமாகக் கொண்ட ஒரு பேரரசை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தனர் அனடோலிய மக்கள். ஹிட்டிக்கள் இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டறிந்தது  தாமதமான வெண்கலயுகத்தின் போது. அதைக் கண்டறிந்து  அனடோலியாவின் ஹிட்டியர்களால் வெளி உலகிற்கு கூறினார்கள்.

    இரும்புத் தொழில், பெயர் இவற்றைப் பொருத்து அதியமானுக்கும், துருக்கி மற்றும் ஹிட்டியர்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதன் படியே துருக்கி மாகாணத்திற்கு தமிழ் மன்னன் அதியமான் பெயர் சென்றிருக்கலாம். தமிழக அறிஞர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் இதைப் பற்றி மேலதிக ஆய்வு செய்து கூறினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp