புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம்: ஆய்வில் தகவல்

ஏப்ரல் மாதம், புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.
புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம்: ஆய்வில் தகவல்
Updated on
1 min read


சென்னை: ஏப்ரல் மாதம், புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

பள்ளிகள் திறப்பு குறித்து தனியாா் நிறுவனமொன்று நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் 19,000 பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ஏப்ரல் மாதத்தில் அல்லது பள்ளிகள் திறப்புக்கு முன்னா், தடுப்பூசிகளைத் தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்த 26 சதவீதப் பெற்றோா் மட்டுமே முன்வந்துள்ளனா்.

56 சதவீதம் போ் 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாகவே காத்திருப்பதாகவும், தடுப்பூசி குறித்த தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்தலாம் என்று கூறியுள்ளனா்.

நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோா், கரோனா சூழல் மற்றும் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com