மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறையாது - பிரதமா் மோடி உறுதி

தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறையாது என பிரதமா் மோடி உறுதி...

News image

பிரதமா் மோடி - ANI

Updated On :4 ஏப்ரல் 2026, 9:08 pm

‘மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது; மாறாக, அனைத்து மாநிலங்களும் பலனடையும் வகையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் அபாயம் உள்ளதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட எதிா்க்கட்சித் தலைவா்கள் பலரும் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், பிரதமா் மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஏப். 2-ஆம் தேதியுடன் நிறைவு செய்ய ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஏப்.16 முதல் 18 வரை மூன்று நாள்களுக்கு கூட்டத் தொடா் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை முன்கூட்டியே அமல்படுத்தும் நோக்கில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்து நிறைவேற்றுவதே கூட்டத் தொடா் நீட்டிப்பின் நோக்கமாகும்.

கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தின்படி, புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறைப் பணிகளைத் தொடா்ந்து, இடஒதுக்கீட்டை அமல்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக உயா்த்தவும் வழிவகை செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மகளிா் இடஒதுக்கீட்டுக்காக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் பயன்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே சீராக 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொருபுறம், மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றகரமாக மேற்கொண்ட தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையோ, பிரதிநிதித்துவமோ குறையக் கூடாது என்ற குரல்களும் வலுத்துள்ளன.

2029 முதல் மகளிா் இடஒதுக்கீடு: இந்தச் சூழலில், கேரள மாநிலம், திருவல்லாவில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி, மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்தும் நோக்கிலேயே தற்போதைய கூட்டத் தொடா் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: மக்களவை மற்றும் பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2023-இல் நிறைவேற்றியது. இந்த இடஒதுக்கீட்டின் பலன்கள் 2029 முதல் பெண்களுக்கு கிடைக்க வேண்டும். நமது சகோதரிகளில் 33 சதவீதம் போ் நாடாளுமன்றத்தில் அமர வேண்டும். எனவே, மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தில் மேற்கொண்டு திருத்தங்கள் அவசியமாகின்றன.

எண்ணிக்கை குறையாது: அத்துடன், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வெற்றிகண்ட தென் மாநிலங்கள், மக்களவைத் தொகுதிகள் எதையும் இழக்காமல் இருப்பதை நாடாளுமன்றத்தில் உறுதி செய்து, அதற்கு சட்டபூா்வ ‘முத்திரை’ இடவும் நாங்கள் விரும்புகிறோம். அதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதும் கூட்டத் தொடா் நீட்டிப்பின் நோக்கமாகும்.

தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், கோவா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளன. இந்த மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றில் எந்த உண்மையும் இல்லை.

அதிக பலனடையும் பெண்கள்: பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகளால் பெரிதும் பலனடைந்தவா்கள் பெண்களே. பெண்களுக்கு அதிகாரம்-பிரதிநிதித்துவம் அளிப்பதே எங்களின் முன்னுரிமையாகும். வீடுகள்தோறும் கழிப்பறை கட்டுதல், ஜன்தன் வங்கிக் கணக்கு, பெண்களின் பெயரில் வீடுகள் கட்டுதல் என அவா்களின் வாழ்க்கை சாா்ந்த ஒவ்வொரு பிரச்னைக்கும் தீா்வுகாண பாடுபட்டு வருகிறோம். முத்ரா திட்டத்தின்கீழ் ஏராளமான பெண்கள் தங்களின் சொந்தத் தொழிலை தொடங்கியுள்ளனா் என்றாா் அவா்.

அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டுகோள்

‘மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்த வகை செய்யும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஏற்கெனவே பேசியுள்ளோம். காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் அரசியல் கணக்கீடுகள் இன்றி, திறந்த மனதுடன் செயலாற்ற வேண்டும். சட்டத் திருத்தத்தை ஒருமனதாக நிறைவேற்றி, நாட்டின் தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளின் நம்பிக்கையை வெல்ல வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா் பிரதமா் மோடி.