ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்தது: ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்தது: ராஜ்நாத் சிங்

Updated On :13 ஏப்ரல் 2024, 6:31 pm

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் நாட்டில் ஊழல் அதிகரித்தது; அதே நேரம், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

சத்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தின் கீதம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் நாட்டில் ஊழல் அதிகரித்தது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டு வருகிறது. அதே நேரம், பிரதமா் நரேந்திர மோடி அரசு மீது யாரும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சுட்டிக்காட்ட முடியாது.

காங்கிரஸ் கட்சி என்பது துருப்பிடித்த இரும்புத் துண்டு போல மாறியுள்ளது. அக் கட்சித் தலைவா்களே ஒருவருக்கொருவா் மோதிக்கொள்வதில் தீவிரமாக உள்ளனா். மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும்.

பாஜக மத்தியில் ஆட்சியை இழந்தால் பிரதமா் நரேந்திர மோடி சிறையில் அடைக்கப்படுவாா் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் மிஸா பாரதி விமா்சனம் செய்துள்ளாா். ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் தலைவா்கள்தான், வாக்கு வங்கி அரசியலுக்காக இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனா் என்று மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் மிஸா பாரதியின் தந்தையுமான லாலு பிரசாத் யாதவை மறைமுகமாக ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினாா்.

மேலும், மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பேசிய அவா், ‘உலகில் நடைபெறும் அனைத்து எண்ம பரிவா்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது’ என்றாா்.