திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

பல்வேறு பதவிகளுக்கான நேர்காணல் தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான

News image
Updated On :29 ஜூன் 2018, 8:16 am IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய துறைகளுக்கான புள்ளிவிவராளர் பதவிக்கு தேர்வெழுதி தகுதி பெற்ற 62 பேருக்கு ஜூலை 10 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு இந்திய சமய அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் நிலை-1 பணிக்கான தேர்வில் தகுதி பெற்ற 9 பேருக்கு ஜூலை 4 ஆம் தேதியும், இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கானத் தேர்வில் தகுதி பெற்ற 31 பேருக்கும், இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர் ஆகிய பணியிடங்களுக்கானத் தேர்வில் தகுதி பெற்ற 30 பேருக்கும் ஜூலை 10 ஆம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.