தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருப்பூர் மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நகல் எண்.இ2/3793/2021
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பருவகால பட்டியல் எழுத்தர்
சம்பளம்: மாதம் ரூ.2,410 + அகவிலைப்படி
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தாவரவியல், விலங்கியல், வேதியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | SBI - வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
பணி: பருவகால காவலர்
சம்பளம்: மாதம் ரூ.2,359 + அகவிலைப்படி
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்கள் விவரம்:
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு 22.12.2021 அன்று காலை 11 மணிக்கும், பருவகால காவலர் பணிக்கு 23.12.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: மண்டல அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர், தொலைபேசி எண். 0421-2217627, 2217616
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டுவர வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்