நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருப்பூர் மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருப்பூர் மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நகல் எண்.இ2/3793/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: பருவகால பட்டியல் எழுத்தர்
சம்பளம்:  மாதம் ரூ.2,410 + அகவிலைப்படி 

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தாவரவியல், விலங்கியல், வேதியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: பருவகால காவலர்
சம்பளம்: மாதம் ரூ.2,359 + அகவிலைப்படி

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்கள் விவரம்: 
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு 22.12.2021 அன்று காலை 11 மணிக்கும், பருவகால காவலர் பணிக்கு 23.12.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: மண்டல அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர், தொலைபேசி எண். 0421-2217627, 2217616

நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டுவர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com