/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணபக் கழக நெல் கொள்முதல் மையத்தில் கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2022, 9:42 am

தினமணி


கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் மையத்தில் கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.1/04864/2022

பணி: பருவகால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள்: 110
சம்பளம்: மாதம் ரூ.8764 + போக்குவரத்து படி ரூ.120
தகுதி: அறிவியல், வேளாண்மையியல், பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: பருவகால உதவுபவர்
காலியிடங்கள்: 117
சம்பளம்: மாதம் ரூ.8717 + போக்குவரத்து படி ரூ.100
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பருவகால காவலர்
காலியிடங்கள்: 146
சம்பளம்: மாதம் ரூ.8717 + போக்குவரத்து படி ரூ.100
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டலம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 13.07.2022 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.