இஎஸ்ஐ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் 3847 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள எம்டிஎஸ், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இஎஸ்ஐ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் 3847 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள எம்டிஎஸ், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 3,847

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மஹாராஷ்டிரா - 594
2. தில்லி - 557
3. தமிழகம் - 385
4. மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் - 320
5. கர்நாடகம் - 282
6. ஆமதாபாத் - 269
7. பஞ்சாப் - 188
8. ராஜஸ்தான் - 187
9. ஹரியானா - 185
10. உத்தரப்பிரதேசம் - 160
11. கேரளம் - 130
12. மத்திய பிரதேசம் - 102 

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 15.02.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, தட்டச்சு தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :  www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. மாற்றுத்திறனாளி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 250 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.esic.nic.in/recruitments/index/page:1 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com