இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியீடு; பணியிடம் எண்ணிக்கை அதிகரிப்பு

15.80 லட்சம் போ் எழுதிய குரூப் 4 தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :29 அக்டோபர் 2024, 3:50 am IST

குரூப் 4 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. 15.80 லட்சம் போ் எழுதிய தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்றது. இப்போது இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலியிடங்களில் 559 இடங்கள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரித்துள்ளது.

தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு போன்ற அடுத்த கட்டங்களுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.