பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியீடு; பணியிடம் எண்ணிக்கை அதிகரிப்பு

15.80 லட்சம் போ் எழுதிய குரூப் 4 தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :29 அக்டோபர் 2024, 7:31 am IST

குரூப் 4 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. 15.80 லட்சம் போ் எழுதிய தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்றது. இப்போது இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலியிடங்களில் 559 இடங்கள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரித்துள்ளது.

தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு போன்ற அடுத்த கட்டங்களுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.