விவசாயம் படித்தோருக்கு மத்திய அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய வன ஆராய்ச்சி கல்வி கவுன்சிலின் கீழ் கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ், கிளார்க் உள்ளிட்ட பணி
விவசாயம் படித்தோருக்கு மத்திய அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
1 min read


இந்திய வன ஆராய்ச்சி கல்வி கவுன்சிலின் கீழ் கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி எம்டிஎஸ் - 5
பணி லோயர் டிவிஷன் கிளார்க்(எல்டிசி) - 3
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 2

தகுதி: பத்தாம் முடித்தவர்கள், பிளஸ் 2 முடித்து ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள், தாவரவியல், விவசாயம் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 25.11.2022 தேதியின்படி 18 முதல், 27, 30க்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்திறன், திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ஒவ்வொரு பணிக்கும் கட்டணம் வேறுபடும். முறையே ரூ.500, 1000, 1,500 செலுத்த வேண்டு. எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.250, 500, 750 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2022

மேலும் விவரங்கள் அறிய ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com