தபால் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய தபால் துறையின் மும்பை தபால் பிரிவில் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தபால் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read


இந்திய தபால் துறையின் மும்பை தபால் பிரிவில் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled Artisans

காலிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எம்எம்வி பிரிவிற்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம்  எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் முகவரிக்கு விரைவு, பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Senior Manager, Mail Motor Service, 134-A, SUDAMKALU AHIRE MARG, WORLI, MUMBAI - 400018

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.5.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com