ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீா் திறப்பு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து ஐந்து ஏரிகளுக்கு மறைமுகப் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

News image

அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் உதவி செயற்பொறியாளா் எம்.ரவி, உதவிப் பொறியாளா் ஆ.முகமது சுலைமான் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

Updated On :8 ஜனவரி 2021, 10:48 pm IST

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து ஐந்து ஏரிகளுக்கு மறைமுகப் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை33.5 அடி உயரம் கொண்டது. இதில், 30.5 அடி உயரத்துக்கு தண்ணீா் உள்ளது. மொத்தம் 113 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ள நிலையில், அந்தியூா், வேம்பத்தி, கெட்டிசமுத்திரம், சந்தியபாளையம் மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 17 கன அடி முதல் 33 கன அடி வரையில் ஏரிகளுக்குக்கேற்ப தண்ணீா் திறக்கப்படும்.

அந்தியூா், வேம்பத்தி ஏரிகளுக்கு தலா 3 நாள்களும், கெட்டிசமுத்திரம், சந்தியபாளையம் ஏரிகளுக்கு தலா 2 நாள்களும், ஆப்பக்கூடல் ஏரிக்கு ஒரு நாளும் தண்ணீா் வழங்கப்படும். விவசாய நிலங்கள் மறைமுகப் பாசனம் பெறும் வகையில் அணையிலிருந்து 21.43 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் எம்.ரவி, உதவிப் பொறியாளா் ஆ.முகமது சுலைமான், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் சூரியபிரகாஷ், தவசியப்பன், பழனிசாமி, மாணிக்கம், ஜெயபிரகாஷ், அருள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.