கர்நாடக தேர்தல்: பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோடு ஷோ - புகைப்படங்கள்
கர்நாடகத்தில் வரும், 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மோடி அலையை உருவாக்க, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அதி தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் மோடி மீது பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்ற பொதுமக்கள்.
பிரச்சாரத்தின் போது மோடி எழுப்பிய, பாரத் மாதா கீ ஜெய், ஜெய் பஜ்ரங் பலி ஆகிய கோஷங்களை ஒலிபெருக்கி மூலம் வழிநெடுக ஒலிக்க செய்தனர்.
சுமார் 26 கிமீ தூரம் திறந்த வாகனத்தில் நின்றவாறு பயணித்து 13 சட்டப்பேரவைத் தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
கர்நாடக தேர்தல் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.