என்னது? விஷத்தையா சாப்பிடுகிறோம்?

சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்.
என்னது? விஷத்தையா சாப்பிடுகிறோம்?

Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம். எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும். சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்.

இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம். இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

உதாரணம் – ப்ரஷர் குக்கர் இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்தவிதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய போராளிகளை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷப் பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது நுண்ணறிய  வேண்டிய விஷயம்.

ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும். அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.

சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.

மண்பாண்டம் – 100 சதவிகிதம். 

வெண்கலம் – 97 சதவிகிதம். 

பித்தளை – 95 சதவிகிதம் 

சில்வர் – 90 சதவிகிதம். 

இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% – 13% தான் இருக்கும்.

இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, மற்றும் இதர வியாதிகளுக்கு தள்ளப்படுவார்கள் எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம்தான் பிரதானம்.

இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

Central Drug Research Institute (CRDI) ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயந்திர உலகத்தில், துரித சமையல் தான் சாத்தியமாகிறது. 

சோம்பேறித்தனமும் சேர்ந்துவிட்டது. 

அவசர அலங்கோல சமையலும் குறைந்து, வெளிச் சாப்பாட்டை ஆர்டர் செய்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 

பழமைக்குமாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!!

விஞ்ஞானம் மற்றும் நாகரீகம் வளர்ச்சி காரணமாக இதை நாம் கடைப்பிடிப்பது முடியாத காரியம் என்று எண்ணலாம். ஆனால் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பதால் கடைப்பிடிக்க முயலுவோம்.

தொகுப்பு : மாலதி சந்திரசேகரன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com