முகப்பரு பிரச்னையா? கண்ட கண்ட கிரீம்களை போடாதீங்க!

இன்றைய இளம் தலைமுறையினர் உடல்ரீதியாக சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு
முகப்பரு பிரச்னையா? கண்ட கண்ட கிரீம்களை போடாதீங்க!
Published on
Updated on
1 min read

இன்றைய இளம் தலைமுறையினர் உடல்ரீதியாக சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுவதால், கண்ட கண்ட கிரீம்களை வாங்கி போட்டு முகத்தை மேலும் வீணாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு செய்யாமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அதற்கான தீர்வுகளை பார்ப்போம்:

ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் (Face wash) கொண்டு முகத்தைக் கழுவலாம்.

வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடியை சுத்தப்படுத்த வேண்டும்.

முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தி முகத்தை துடைக்கவும். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்கக் கூடாது.

ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.

துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வர, முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

பட்டைத் தூளை தேன் கலந்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்து வர பரு நீங்கும்.

- கவிதா பாலாஜிகணேஷ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com