திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

நாடாளுமன்றத்தில் உத்தரகாண்ட் விவகாரம்: அவை நடவடிக்கைகள் முடங்கின

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை துவங்கியது. இதையடுத்து, உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

Updated On :25 ஏப்ரல் 2016, 7:20 am

புது தில்லி :  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை துவங்கியது. இதையடுத்து, உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

மக்களவையில் இன்று உத்தரகாண்ட் விவகாரம் குறித்துப் பேசிய கார்கே, 'இது ஜனநாயகப் படுகொலை' என்று கூறினார். தொடர்ந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

மக்களவையில் கடும் அமளி நிலவியதால், அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அவையை ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும், உத்தரகாண்ட் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால், அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.