திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க உத்தரவு: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆதர்ஷ் குடியிருப்பை இடித்துவிட மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2016, 10:39 am

மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆதர்ஷ் குடியிருப்பை இடித்துவிட மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி கழகத்தால் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட 31 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை இடித்துவிடும்படி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், இந்த உத்தரவை செயல்படுத்த 12 வாரங்கள் கால அவகாசம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடுகளை ஒதுக்கக் காரணமாக இருந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.