திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி

மும்பையில் இன்று மதியம் 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Updated On :30 ஏப்ரல் 2016, 10:36 am

மும்பை : மும்பையில் இன்று மதியம் 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கிராட் ரோட் அருகே கமதிபுரா என்ற பகுதியில் இருந்த அடுக்குமாடிக் கட்டடம், பிற்பகல் 2 மணியளவில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

உடனடியாக நடந்த மீட்புப் பணியில் 5 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.