3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

ஜைன துறவிகளுடன் பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத் தலைவர் சந்திப்பு

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து இந்தியா வந்துள்ள முக்கியமான அரசியல்...

Updated On :25 செப்டம்பர் 2016, 1:50 am IST

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து இந்தியா வந்துள்ள முக்கியமான அரசியல் தலைவர், உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் ஜைன மதத் துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பலூசிஸ்தான் விடுதலைக்காக போராடி வருபவர் மீர் மஸ்தாக் தில்ஷத் பலூச். உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வந்த அவர், அங்குள்ள ஜைன துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்தியவில் ஆய்வுக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அமித் ராய் ஜெயினும் அவருடன் இருந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் மீர் மஸ்தாக் தில்ஷத் பலூச் கூறுகையில், "பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெறும் முகம் மட்டுமே. பாகிஸ்தான் அரசை ராணுவமே நடத்தி வருகிறது' என்றார்.
அமித் ராய் கூறுகையில், "தாங்கள் பலூசிஸ்தானில் படும் கஷ்டங்களையும், எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் ஜைன துறவிகளிடம் பலூச் எடுத்துரைத்தார். பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற ஜைன துறவி ஆசார்ய சுபத்ர முனிஜி மகராஜிடம் ஆசி பெற்றுச் சென்றார்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.