தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆதரவு
தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.


தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகள் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, பயிர் காப்பீட்டுக் கடன் தள்ளுபடி, உடனடியாக நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லி ஜந்தர்மந்தரில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 14ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 19ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது அவர் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...