இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானவை: தேர்தல் ஆணையம் உறுதி

தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்று அதனை உற்பத்தி செய்தவர்களால் கூட சேதப்படுத்த

News image
Updated On :9 ஏப்ரல் 2017, 1:31 pm

DIN

புதுதில்லி: தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்று அதனை உற்பத்தி செய்தவர்களால் கூட சேதப்படுத்த முடியாது எனவும் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட எம்1 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனைத்திலும் தேவையான நுட்பமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதனை யாரும் எளிதாக ஹாக் செய்ய முடியாது எனக் கூறியுள்ளது.

மேலும், 2006க்கு பின் 2012 வரை தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில், கூடுதலாக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த கூடுதல் வசதிகள் மூலம் சந்தேகம் ஏற்படும் வகையில் பொத்தான்கள் அழுத்தப்படுவது கண்டுபிடிக்க முடியும். இந்த இயந்திரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியாது.

இயந்திரங்கள் மட்டும் தனியாக செயல்படுபவை. எந்த இணையதள சேவை அல்லது நெட்வொர்க் மூலம் இணைக்கப்படாதவை என்றும் இயந்திரங்கதள் தனித்து தனியாக செயல்படுபவை. இதனை ரிமோட் மூலம் இயந்திரத்தை யாரும் இயக்கவோ, ஹாக்க செய்யவோ வாய்ப்பு கிடையாது. சேதப்படுத்தவும் முடியாது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இயந்திரங்களை உற்பத்தியாளர்கள் சேதப்படுத்தலாம் என கூறப்படுபவை பொய்யானது. இதற்கு வாய்ப்பு கிடையாது. இயந்திரங்கள் அனைத்தும் இசிஐஎல் மற்றும் பெல் நிறுவனங்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு தயாரித்தவை. அவை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உற்பத்தியாளர்களுக்கு யார் வேட்பாளர், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள், எப்போது போட்டியிடுவார்கள், வேட்பாளர்களின் பெயர் எந்த வரிசையில் இருக்கும் என்ற தகவல் தெரிய வாய்ப்பில்லை தெரியாது. இதனால், அவர்களால் அதில் முறைகேடு செய்ய முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அக்கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார். பஞ்சாப் தேர்தலில் தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கும் இதே காரணத்தை அரவிந்த் கேஜரிவால் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.