
இந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த செவ்வாய்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு பிரமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்தார்.
இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
இந்தியாவின் புதிய குடியரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களின் துவக்க உரையைக் கண்டு வியந்தேன். அதில் நீங்கள் தேசத்தின் பலம், ஜனநாயகம் மற்றும் ஒற்றுமை குறித்து சிறப்பாக பேசினீர்கள்.
நீங்கள் குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்டது, நம் இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துவிட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.