தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பெங்களூர் சிறையில் கன்னடம் கற்கிறார் சசிகலா: டிஐஜி ரூபா தகவல்

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலா, கன்னடம் மொழியை கற்று வருவதாக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

News image
Updated On :27 ஜூலை 2017, 10:47 am

DIN


பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலா, கன்னட மொழியை கற்று வருவதாக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலாவுக்கு சிறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய டிஐஜி ரூபா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு இரண்டு முறை சென்று ஆய்வு நடத்தினேன். அப்போது மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதையும், அதில் சசிகலாவுன் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதையும் நேரில் பார்த்தேன்.

சிறையில் ஆய்வு செய்த போது, சசிகலாவிடம் பேசினேன். நீங்கள் கன்னடம் கற்று வருகிறீர்களா? என்றேன். அதற்கு அவர் ஆமாம், கற்று வருகிறேன் என்றார். உங்கள் அறையில் இருக்கும் சாமி படங்களை காட்டுங்கள் என்றேன். நான் கன்னடத்தில் சொன்னதை அவர் புரிந்து கொண்டு அவற்றை காட்டினார்.

நான் கன்னடத்தில் பேசியதை சசிகலா ஓரளவுக்கு புரிந்து கொண்டார். ஆனால், சரியாக பதில் சொல்ல முடியவில்லை.  இதனால் அவரிடம் என்னால் சரியாக பேச முடியவில்லை என்று ரூபா கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.