இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகுகிறார்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பதற்கு வசதியாக, அந்தப் பதவியிலிருந்து சோனியா காந்தி வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்கு முன்பாக ராஜிநாமா செய்யலாம் எனத் தெரிகிறது.

News image
Updated On :6 ஜூன் 2017, 8:41 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பதற்கு வசதியாக, அந்தப் பதவியிலிருந்து சோனியா காந்தி வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்கு முன்பாக ராஜிநாமா செய்யலாம் எனத் தெரிகிறது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், அக்கட்சியின் உள்கட்சி தேர்தலை வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது அவரிடம், கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியை தலைவராக்குவது குறித்து காரியக் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தலை நடத்தும் அட்டவணைக்கு காரியக் கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது' என்று எதிர்மறையாக பதிலளித்தார். மேலும் அவர், ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்குவது குறித்து மட்டும் விவாதிக்கவில்லை என்றார்.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றபோது, ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் பலர் வெளிப்படையாக கருத்து வெளியிட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோரும் இந்தகருத்தை தீவிரமாக வலியுறுத்தினர்.
காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி, கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற அக்கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, அந்தப் பதவியில் 19 ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஜெய்ப்பூரில் கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.