இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாட்டில் போதிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை: பிரணாப் முகர்ஜி

நாட்டில் போதிய அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

News image
Updated On :7 ஜூன் 2017, 10:00 pm

DIN

நாட்டில் போதிய அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் (ஏஐஎம்ஏ) 75ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
ஆண்டுதோறும் 1 கோடி பேர் புதிதாக வேலைவாய்ப்புத் தேடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான போதிய புதிய வேலைவாய்ப்புகள் சந்தையில் புதிதாக உருவாக்கப்படவில்லை. புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களை சார்ந்தே, இப்பிரச்னைக்கான தீர்வு அமைந்துள்ளது. ஆதலால், சிறிய அளவிலான தொழில்கள் தொடங்குவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்தியாவில் இளம்தலைமுறையினரும், பணியாற்றும் தொழிலாளர்களும் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இது நமது நாட்டுக்கு சில காலம் கூடுதல் சாதகமாக இருக்கும். இளம்தலைமுறையினர், பணியாற்றும் தொழிலாளர் சக்திகளை நாம் ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபடுத்த வேண்டும். இல்லையெனில், இவர்கள் மூலம் நமது நாடு உண்மையான பலன் அடைய முடியாது.
நாட்டில் நிர்வாக மேலாண்மை, தொழில்முனைவோர் திறன்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தொழில்முனைவோர்க்கு சிறப்பான முறையில் செயல்படுவது தொடர்பான பயிற்சியை அளிக்க மேலாண்மை தொடர்பான கல்வியை கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகளை தேடிச் செல்வதை தவிர்த்து, அதிக அளவில் தொழில்களை தொடங்க வேண்டும்; அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றே நாடு எதிர்பார்க்கிறது.
உலகம் வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களால் இடையூறுகள் ஏற்படக்கூடும். அப்படி ஏற்படும் இடையூறுகளை சமாளிப்போரே சிறந்த நிர்வாகிகள் ஆவர்.
1900-1950ஆம் ஆண்டுகளில் உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போதோ, உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.