காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உயிரிழந்த 5 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி, அரசு வேலை: சிவராஜ் சிங்

மத்தியப் பிரதேச மாநிலம், மன்த்சௌர் மாவட்டத்தில் வன்முறையில் உயிரிழந்த 5 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங்

News image
Updated On :7 ஜூன் 2017, 8:30 pm

DIN

மத்தியப் பிரதேச மாநிலம், மன்த்சௌர் மாவட்டத்தில் வன்முறையில் உயிரிழந்த 5 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உறுதி அளித்தார்.
மன்த்சௌரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன்முறையில் காயமடைந்த 6 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
"இந்த அறிவிப்பானது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை' என்று பாஜக விவசாயிகள் அணியில் இருந்து விலகிய பிரமுகரும், படிதார் சமூகத் தலைவருமான பிரேம் படிதார் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, ராஷ்ட்ரீய விவசாயிகள் மஸ்தூர் சங்கத்தின் தேசியத் தலைவர் சிவகுமார் சர்மா கூறியதாவது:
விவசாயிகளின் மகன் என்று சௌஹான் அழைக்கப்பட்டு வந்தார். ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவரது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. வேளாண் துறையில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாக நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
10 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் சௌஹான் முதல்வராக பதவி ஏற்றபோது மாநில அரசின் கடன் ரூ.22ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது, ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளது என்றார் சிவகுமார் சர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.