கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: சுஷ்மா சுவராஜ்

கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: சுஷ்மா சுவராஜ்

கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கத்தார் உடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைருவமான மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், கத்தாரில் தமிழர்கள் உட்பட ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com