அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் தற்போது 1,400 ஐஏஎஸ் பதவிக்கும், 900 ஐபிஎஸ் பதவிக்கும் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் ஜேதேந்திர சிங் கூறியுள்ளார்.

News image
Updated On :22 மார்ச் 2017, 10:41 am

தினமணி


புது தில்லி: இந்தியாவில் தற்போது 1,400 ஐஏஎஸ் பதவிக்கும், 900 ஐபிஎஸ் பதவிக்கும் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் ஜேதேந்திர சிங் கூறியுள்ளார்.

இந்தியாவில் நிர்வாகத் துறையில் (ஐஏஎஸ்) மொத்தமுள்ள 6,396 பதவியிடங்களில் தற்போது 4,936 அதிகாரிகள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். எனவே, 1,470 நிர்வாகக் காலியிடங்கள் உள்ளதாக மக்களவையில் அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

இதில் பிகார் மாநிலத்தில் அதிகபட்சமாக 128 காலிப்பணியிடங்களும், உத்தரப்பிரதேசத்தில் 117 இடங்களும், மேற்கு வங்கத்தில் 101 இடங்களும் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய காவல்துறை நிர்வாகத்தில் மொத்தமுள்ள 4,802 பதவியிடங்களில் தற்போது 3,894 ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் 908 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் 114 காலிப் பணியிடங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா, கர்நாடகா அடுத்த இடங்களில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.